Tuesday, June 28, 2011

அகதியாய் நாம் சாதித்தது என்ன....

அலைகளின் இடையே அகதியாய் நாம் இங்கு வந்து 30 ஆண்டுகள் ஆகிவிடப் போகிறது...ஒவ்வோரு ஆண்டு ஆரம்பிக்கும் போதும் இந்த வருடம் எப்படியாவது சரிவருமா... என்ற ஏக்கங்களுக்கு மத்தியில் இனி காத்திருக்கும் மக்கள் மெல்ல மெல்ல குறைந்து கொண்டே வருகிறது. காரணம்... பிறந்த மண் தெரியாததும் தாய் மண்ணில் பிறக்காததுமான சந்ததி வந்து விட்டது.


முகாம்களிலே நான் உலவுகின்ற போது கவனித்த பல சம்பவங்கள் என்னை ஈழத்தமிழந்தானா என எண்ணிப்பார்க்க செய்கின்றது. அது ஒன்றும் அவர்கள் தவறு இல்லை... பெற்றோர் சொல்லிவைக்காத எம் மண்ணின் பெருமையும் இங்குள்ள சூழ்னிலைகளும் அவர்களை மாற்றி வைத்திருக்கின்றது... நாடு கெட்டு போவதற்கு நாகரீகம் அடையாளம் என கூறிய கண்ணதாசனின் பாடல் என்னில் ஒருகணம் வந்து போனது...


சம்பவங்கள் பல.... ஆனால் அதை பட்டியலிட்டு கூறி என் பல்லைக்குத்தி என் மூக்கில் வைத்து மோர்ந்து பார்க்க விரும்ப வில்லை....காலம் எவ்வாறாயினும் மாறிவிட்டு போகட்டும் நாம் தமிழர் என்பதில் மாறாமல் இருப்போம்... எமது விடிவுக்காய் ... தமிழக சொந்தங்களும்.. நாம் யார் என்று தெரியாவிடினும் மனிதம் என்று வெளி நாட்டவரும் கிளர்ந்தெழுகையில் நாம் என்ன செய்து கொண்டு இருக்கிறோம்?.....


நாட்டினை விட்டுவந்த அனைவரும் அந்தந்த நாட்டின் குடிமக்களாய் ஆகிவிட்ட பொழுதும் நாம் மட்டும் இன்னும் அகதிகளாய் இருக்கின்றோம் என்றாவது நாம் நாடு திரும்புவோம் என்று...... திரும்பிக்கொண்டுதான் இருக்கின்றோம் நாள் தோறும்... அட்டை பாஸ்போர்ட் ... வாங்கி கொண்டு... அங்கே சிங்களவன் வீடு கட்ட தகரம் தருகிறானாம் என்று.....


உங்கள் தேசம் உங்களுக்கு மறந்து போய் இருக்கட்டும்... இல்லை நீங்கள் அங்கு பிறக்காதவராய் கூட இருக்கட்டும்... ஒரு நொடியேனும் நினைத்து பாருங்கள் எம் மக்கள் படும் அவலத்தை. வானம் எங்கும் பறந்தாலும் பறவை என்றும் தன் கூட்டில்... உலகம் எங்கும் வாழ்ந்தாலும் தமிழன் என்றும் தாய் நாட்டில்... வாழும் எண்ணம் கொள்ளுங்கள்...


அகதியாய் இதுவரை நாம் சாதித்தது என்ன என சிந்தித்து பாருங்கள்... நாளை........இங்கு வாழ்ந்த தமிழ் அகதிகளின் பெயர்களையும் வரலாற்று சுவட்டில் ஏற்ற வழியைத் தேடுங்கள்... புதிய உலகம் பல வழிகளைக்கற்றுத் தருகிறது நமக்கு நம் இலக்கை அடைய... அதனை எடுத்து கொண்டு எதிரியை வீழ்த்தும் வழிகளைத் தேடுங்கள்....