Friday, January 6, 2023
அன்புடன் அண்ணாவுக்கு......
அன்புடன் அண்ணாவுக்கு......
ஏன் எங்களுக்காக எதையும் செய்தாய்
உனக்காக நீ வாழாத அந்த சொர்க்க வாழ்க்கையினை விட்டு விட்டு
எதற்காக எங்களுக்கு எதையும் செய்தாய்.
உன்னை போல் தானே உலகில் எத்தனை மனிதர்கள்
தங்கள் சுயநலமே வாழ்க்கை என்று வாழுகின்ற வேளையிலே
எமக்காக ஏன் நீ எதையும் செய்தாய்.
உன்னை சுயநலக்காரன் என்னும் கூட்டமும் எம்முடந்தானே இருக்கிறது அத்தனை அறிந்தும் இத்தனை முயற்சி எதற்காக நீ எடுத்தாய்.
நான் அறிவேன் அண்ணா உன் எண்ணமும்,
நீ எம்மீதும் இந்த மண்மீதும் கொண்ட பாசத்தினை.
நாட்டை ஆள்வதுதான் உன் லட்சியம் என்றால் என்றோ
அந்நியனுக்கு நீ விலை போயிருப்பாய் .
நாங்கள் ஆள வேண்டும் என்று நினைத்த்தனால் தான் உன் உதிர பிறப்புக்களையும் சேர்த்து பறி கொடுத்தாய்.
அண்ணா இது சுயநலவாத உலகம் நீ இவர்களை நம்பாதே
நீ எம் தேசம் காக்க இறுதிவரை போராடிக்கொண்டு இருந்த போது
ஒரு தமிழன் தன் மகனுக்கு மந்திரி பதவி வேண்டி கண்டு கொள்ளாமல் இருந்தான்.
மற்ற தமிழன் ஒருவன் தனது மந்திரி பதவிக்காக நம்மையே காட்டி கொடுத்து கொண்டிருந்தான்.
அண்ணா இது சுயநல பூமி இன்னொரு முறை நீ எம் முன் வா..
இவர்களின் வாய்களில் இருந்து எம்மை உயிரோடு மீட்டெடு...
எலும்புக்கு அலையும் நாய்களிடம் இருந்து எமக்கு விடுதலை கொடு
நாட்டுக்காய் இறந்த நம் நாயகர்களுக்கு ஒரு சரித்திரம் கொடு
கூடி சதி செய்தவர் கூட்டம் ஒழித்திட எமக்காக ஒரு விதி செய்
இந்த உலகத்தில் எவராலும் எம் விடுதலை பற்றி பேச முடியும்
ஆனால் உன்னால் மட்டும்தான் அதை பெற்றுத்தர முடியும்.
ஏன் என்றால் எம் மக்களின் கடவுள் நீதானே.
ஈழத்தை பிரசவிக்கும் தாயும் நீதானே....
இப்படிக்கு உன் அன்பு தம்பி அகதி முகாமில் இருந்து
Subscribe to:
Posts (Atom)