Tuesday, August 10, 2010

முள்ளி வாய்கால்.

இந்த கொடூரங்கள் அரங்கேறிய இந்த நாட்கள் எம் மனதில் என்றும் அழியாத சுவடுகளாக இருக்கட்டும்... நடந்து முடிந்தவற்றை மறந்தால் அடைய வேண்டியவை தெரியாமல் போய்விடும்.

Wednesday, August 4, 2010




காலத்தை எண்ணிக்கொள்

யாதென்று நாம் சொல்வோம்
தீதென்று தெரிந்தே எம் மீது பகைவர்
கூர் கொண்டு அழித்ததனை.
போர் என்ற மேகம் சூழ்ந்திருந்த போதெல்லாம்
பார் என்று உலகை பதறி நாம் கேட்டோமே
பார்த்தாயா...................

இன்று அனைத்தும் முடிந்து விட்டது
அத்தனையும் இழந்து விட்டோம்
ஊருக்குள் மனிதர் இல்லை
பிணங்கள் தின்ன கூட கழுகுகள் இல்லை
அத்தனையும் எரித்து விட்டான் பகைவன்
என் பந்தங்கள் இருந்த இடமே தெரியாமல்.

உணவின்றி உடையின்றி உட்கார இடம் இன்றி
வெட்டை வெளியில் வெறிச்சோடி நிற்கும் எங்களை மட்டும்
ஏன் விட்டு வைத்தீர்கள்? உங்கள் மானம் கெட்ட வெற்றிக்கு
அடையாளமா நாங்கள் ......
ஏ... உலகத்து நீதி பேசும் அன்பர்களே
எங்கள் மீது மட்டும் ஏன் அதை பார்க்க மறந்தீர்
உங்கள் நா பேச தேவை எங்கள் உத்திரங்களா?
இப்போதே கேட்டு விடுங்கள்
எங்களிடம் அது மட்டும் தான் கொஞ்சமேனும் இருக்கிறது.
அகிம்சை எமது பிறப்பிடம் ஜனநாயகம் என் நாட்டின் இருப்பிடம்
என வாழும் நாடே ....உன் பழி வாங்களுக்கு நாம்தான் கிடைத்தோமா?

உன் தலைவன் செய்த கொடுமைகளை மறுபடியும்
நீ செய்து முடித்து விட்டாய். இதுவரை நீ
நிகழ்த்தியதை மறந்திடாதே ....... காலம்
உனக்காக சில காயங்களை எங்கள் மீது
ஆறாமலே வைத்திருக்கட்டும்.

உதிரங்க்களை உங்கள் வாயால் குடித்து விட்டு
ஊட்ட மருந்து தரும் மூட்டை பூச்சிகள் நீங்கள்.
எங்கள் சொந்தம் எங்கள் உறவு எங்கள் நாடு
என்று வாழ்ந்த எங்களை அழித்து ஏதிலியாய் மாற்றிவிட்டு
பிச்சை போடுகிறாயா எமக்கு.......

உன் பிச்சை தின்று உயிர் வாழும் எண்ணம் இல்லை
எமக்கு – எம்மையும் அழித்து விடு.
உனக்கு உயிர் என்ன பெரிதா – உன் இனம்
என்றால்தான் உயிர் மற்றதெல்லாம் உனக்கு மயி......


தலை பாகை கழட்ட சொன்னான் ஒருவன் என்று
தன மானம் காக்க ஓடினாயே..
உன்னவன் அன்று என் தங்கைகளின் தாவணியை
கழட்ட வந்தான் அவனை நாங்கள்
கொள்ளாமல் விடுவோமடா நா ....

சிங்களத்தை பகடையாக்கி எம் மீது
உன் பழியை தீர்த்து விட்டாய்
அதை எண்ணி நீ நகைக்காதே
காலத்தை எண்ணிக்கொள் அதன் மாற்றம்
உனக்காக பல ரணங்களை கொடுக்க காத்து கொண்டு இருக்கிறது.

ஸ்ரீதரன்.
களஆய்வு
பெயர்: லீலாவதி
வயது:38
குடும்ப விபரம்:
பாதிப்பு:HIV positive மற்றும் விபச்சார தொழிலில் ஈடுபடுபவர்

லீலாவதி மதுரையின் அருகில் உள்ள கிராமம் ஒன்றை சேர்ந்தவர் தற்போது ஒரு பெண் குழந்தையுடன் வாழ்ந்து வரும் அவருக்கு எயிட்ஸ் பாதிப்பு இருப்பது 3 வருடங்களுக்கு முன்புதான் தெரிய வந்தது. தற்போது மையப்பகுதியில்வாழ்ந்து வரும் இவர் கடந்த 15 வருடங்களுக்கு மேலாக விபச்சார தொழிலில் ஈடுபட்டு வருகிறார். இவரின் இந்த வாழ்க்கைக்கான காரணம் பற்றி கேட்ட போது.

மதுரை மாவட்டத்தின் தென் கரையோர கிராமம் ஒன்றில் வசித்து வந்த லீலாவதியின் குடும்பத்தில் மொத்தம் ஆறு பேர் நான்காவது பெண்ணாய் பிறந்த லீலாவதியை பதின்மூன்று வயதில் அருகில் இருந்த வனத்தின் பாதுகாப்பு அதிகாரியாக பணி புரிந்த இருபத்தி எட்டு வயது நபர் ஒருவருக்கு திருமணம் செய்து வைத்தனர். தாம்பத்திய வாழ்கையே என்னவென்று தெரியாத வயதில் ஒரு ஆணுடன் வாழ்க்கை நடத்த சென்ற லீலவதியால் மூன்று நாட்கள் கூட அந்த ஆணுடன் சேர்ந்து வாழ முடிய வில்லை. வீட்டை விட்டு ஓடி சென்ற லீலாவாதி மீண்டும் அவர்களது அம்மா அப்பாவுடன் மூன்று வருடம் தங்கி இருந்தார் அந்த நிலையில் லீலாவதியின் அண்ணன் தம்பி இடையே சொத்து தொடர்பாக பிரச்சனை எழுந்தது அந்த பிரச்சனையில் இரண்டாவது அண்ணன் அவர் தம்பியை வயல்வெளியில் வைத்து கொலை செய்துவிட இதனை பார்த்த லீலாவதி வீட்டை விட்டு வெளியே ஓடி போனார்.

வீட்டை விட்டு சென்ற லீலாவதி தங்குவதற்கும் இடம் இல்லாமல் திரிந்த போது அருகில் இருந்த தியேட்டரில் படம் பார்க்க சென்ற போது அங்கிருந்த ஒரு பெண் இவரை பின்தொடர்ந்து அவருடன் பேசி அவரை தன்னுடன் அழைத்து சென்று விட்டார். அவர் சில ஆண்களை அறிமுகப்படுத்தி இவர்களுடன் சென்றாயானால் உனக்கு பணம் கிடைக்கும் என்று ஆசை வார்த்தைகளை கூறி அவரை விபச்சாரத்தில் ஈடுபடுத்தி விட்டார். அதன் பின்னரான லீலாவதியின் வாழ்க்கை திசை மாறி போனது அதன் பின் அவர் பணத்துக்காகவும் சுகத்துக்காகவும் விபச்சாரத்தில் ஈடு பட தயாரானார். அந்த வேளையில் லீலாவதிக்கு அந்த பகுதியை சேர்ந்த குழந்தை வேலு என்பவருடன் தொடர்பு ஏற்பட்டது அவர் ஏற்கனவே திருமணமாவர் அவருடன் திருமணம் செய்யாமலே வாழ்க்கை நடத்தி வந்த லீலாவதி அந்த வாழ்க்கை மூன்று வருடங்கள் மட்டுமே தொடர்ந்தது. அதன் பின் குழந்தை வேலு மரணம் அடைந்து விட மீண்டும் பழைய வாழ்க்கைக்கு திரும்பினார். அதன் பின் அவர் தொடர்பு வைத்திருந்த ஆண்கள் தனக்கே ஞாபகம் இல்லை எனும் லீலாவதி அந்த வேளையில் வந்திருந்த ஒருவரை பிடித்து போக அவர் மூலம் கர்ப்பமானார் ஆனால் அவர் வெறும் மூன்று மாதங்கள் மட்டுமே லீலாவதியுடன் வாழ்ந்தார்.அந்த குழந்தையை பெற்று தற்போது அக்குழந்தை மூன்றாவது படித்து வருகின்றது.

இந்த வேளையில் அவர் மீண்டும் விபச்சாரத் தொழிலை தொடர்ந்து கொண்டிருந்தபோது வந்திருந்த ஒருவர் மூலமாக ஹெச் ஐ வி தொற்றுக்கு உள்ளானார் லீலாவதி. அதனை அறிந்து கொள்ள அவருக்கு ஒருவருடங்கள் ஆனது. சிகிச்சைக்காக சென்ற இடத்தில் முறை சாரா கல்வி மையத்தின் தொடர்பு ஏற்பட்டு பொருட்கள் வாங்க வந்திருந்த அவர் தற்போது இட்லி விற்று சம்பாதிப்பதாக கூறுகிறார். இருந்த போதும் இன்றுவரை தன்னால் விபச்சாரத்தில் ஈடு படுவதை நிறுத்த முடியவில்லை எனும் அவர் தனது ஆசைகளை அடக்க முடியாததே காரணம் என்கின்றார். தன்னுடைய இந்த வாழ்க்கைக்கு தனது குடும்பமே காரணம் என்றும் ஆண்கள் எவரும் நம்பிக்கைகுரியவர்கள் இல்லை என்ற எண்ணமும் மேலோங்கி காணப்படுகிறார் லீலாவதி.