Sunday, January 9, 2011




நிலைக்குமா இந்த மாற்றம்.

இன்னைக்கு சாயங்காலம் பக்கத்தில இருக்கிற மளிகை கடைக்கு போனேன் பாலும் ,சீனியும் , உருளைக்கிழங்கு வாங்கிட்டு பை கேட்டேன். பாண்டி அன்ன சொன்னார் தம்பிக்கு விஷயம் தெரியாது போல பிளாஷ்டிக் பையெல்லாம் ஒன்னாம் தேதில இருந்து தடைபண்ணிடாங்க. வீட்ல இருந்துஎதாவது கொண்டுவாங்கன்னு.கெஞ்சி கூத்தாடி பழைய பை ஒன்ன வாங்கிட்டன். இந்த பிளாஷ்டிக் தடைய எப்போவே கொன்னு வந்தாச்சுன்னு சொன்னங்க இன்னைக்குதான் எனக்கு தெரிஞ்சிது. உண்மையிலே வரவேற்க பட வேண்டியதுதான் என்னையே நான் நொந்து கொண்டேன் அச்சமயம் கடைக்கு போறேங்கிறது தெரியுது ஏன் பை கொண்டு போகன்னுமுன்னு தோனல எனக்கு.

எவ்வளவு அழிவு இந்த பிளஷ்டிக்கால் இந்த உலகத்தின் தட்ப வெப்பத்தையே மாற்ற கூடிய சக்தியை பெற்றுவிட்டது.இன்னும் ஐம்பது ஆண்டுகள் கூட தாங்காது என்கிறார்கள் இந்த மனிதர்களின் சாதாரண வாழ்க்கை நிலைக்க இப்பவே இருபது லீட்டர் தண்ணி இருபத்தி ஐந்து ஆகிடுச்சு.நாளைக்கு ஒரு சிலிண்டர் காற்று இருநூறு ரூபாயாவது விற்கும். நம்மாளுங்க இப்பவே சமையல் சிலின்டர பதுக்க ஆரம்பிடுச்சிட்டாங்க. நாளைக்கு காற்று சிலிண்டரும் பதுக்கிட்டாங்க என்னா இந்திரன் படத்துல ரோபோ கார மடக்கி கரண்ட் ஏத்துற மாதிரி நாளைக்கு வீடு வீட திருட வேண்டி வரும்முன்னு. ஆனா இந்த பல்பொருள் அங்காடி எல்லாம் ஒரே பிளாஷ்டிக் பை மயமா இருக்கே. துணிகடையில கர்சிப் வாங்கினா கூட ஒரு பெரிய காரி பேக் கொடுக்கிறாங்களே அத நிறுத்துவாங்களா. ம் இந்த பை இல்லாம இன்னைக்கு எந்த பொருளும் வர்றதில்லையே எண்ணை பாக்கேட்டனாலும் சரி உப்பு,மிளகு, மிளகாய்த்தூள் எல்லாமே பிளஷ்டிக்தான் அதெல்லாம் நிறுத்துவாங்களா. எதையோ செய்யன்னும்முன்னு நெனைக்கிறாங்க ஆனா எப்படி செய்யனும்முன்னு தெரியல்ல.கடையில போனா எல்லாமே பிளஷ்டிக்தான் பை மட்டும் இல்லையாம். சரி என்னத்த சொல்லி என்னத்த செய்ற.... ஸ்ரீ பால் பாக்கேட்ட கொடுன்னு அம்மா கேட்டப்பதான் இந்த க்ளோபல் பிரச்சனையில் இருந்து வெளில வந்து வீட்டுக்குள்ள போனான்.

No comments:

Post a Comment